விவசாயக்”குடி”மக்கள்

சமீபத்தில் ஒரு கிராமம் வழியாக செல்ல நேர்ந்தது ,காலை நான் செல்லும் போது ஒரு வயதான விவசாயி அதிகாலை முதல் வயக்காட்டில் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்,சொற்ப வருமானமே வந்தாலும் இவர் போன்ற விவசாய தெய்வங்கள் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால்,உழுவதால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.மாலை நான் திரும்பி வரும் போது அதே விவசாயியை காண நேர்ந்தது.வயக்காட்டில் அல்ல???,Taasamac இல்.

1686_1

கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம் விவசாயிகள் இப்படி குடித்து குடித்து தானும் அழிந்து,விவசாயத்தயும் அழிக்கின்றார்களே என்று மிகுந்த வேதனையில் எழுதியது இக்கவிதை (அல்லது) பத்தி.

                                                                  ” அதிகாலை விவசாயி வயக்காட்டில்-மாலையோ

                                                                                அவன் கையில் மதுபாட்டில்

                                                                   என்று ஒழியும் இந்த கொடுமை என் தாய் தமிழ்நாட்டில்???

                                                                                 வேண்டும் உடனே மதுவிலக்கு

                                                                  அதுவரை என் தமிழன் மதுவிலங்கு! மதுவிலங்கு!! .”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.